Sunday, August 29, 2010

மறக்க செய்யும் மாய எந்திரம்...காலம்....

கண் முன்னே நிஜமாய்
கண்டவர்களை எல்லாம்
கனவில் நிழலாய்
மட்டுமே காண முடிகிறது

தாகத்திற்கு பானை நீராய்
இருக்க வேண்டியவர்கள்.... இன்று
தொட தொட தூரமாய் போகும்
கானல் நீராய் மட்டுமே.....


சுகமான நிஜங்கள் 
சுமையான நினைவுகள் ஆகும் போது......
மறக்கின்ற சக்தி இல்லை எனில்
மாய்ந்து போகுமோ இந்த மானுடம்.......


அந்த நினைவுகள் சுகமாய் தோன்றுவது
கனவுகள் பூசும் சாயத்தால்.....
நிஜம் புரியும் போது சுமையாவது...
மனம் பட்ட காயத்தால்....

நிஜமாய் நடக்க வேண்டிய நிகழ்வுகளை
இறக்க செய்து நினைவுகளாக்கியது.....கடவுள் செய்த தந்திரம்.......
ஆனால் வலியாய் இருக்கும் நினைவுகளுக்கு
மருந்து போட்டு ஆற்றியது........ காலம் என்னும் மாய எந்திரம்....

2 comments:

  1. கார்த்தி...அமெரிக்க வாழ்வில் தனிமையில் இருக்கும் சில நிமிடங்களில் வாழ்ந்து வந்த வாழ்க்கை நினைவில் வரும் போது வந்து விழுந்த வரிகள் என நினைக்கிரேன்.....

    ReplyDelete
  2. இல்லை சுரேசு.....
    இது தனிமை பற்றிய கவலை இல்லை.....
    பாரம் கொண்ட மனம்...... கசியும் ஈரம்......

    இந்த வரிகள் எனக்காக மட்டும் அல்ல.....

    என் கவிதைகள்
    சந்தோஷ படும் மனங்களுக்கு விருந்தாக இருப்பதை விட
    சஞ்சல படும் மனங்களுக்கு மருந்தாக இருக்க ஆசைபடுகிறேன்.......

    ReplyDelete